என் சொல்லி ஸ்தோத்தரிப்பேன்

Sent: Saturday, 7 April 2012 12:23 PM
Subject: marravai neril ---57
                  மற்றவை  நேரில்---57
                  -----------------------------------
  (குறிப்பு;---இது முழுவதும், நைச்யானு சந்தானம்-----முன்பு எழுதியவை களைப் போல )
                         என் சொல்லி ஸ்தோத்தரிப்பேன்
                 
 ஹே மாயக்கூத்தா ,
                   ஹே மணிவண்ணா ,
                   ஹே குன்றெடுத்து  குளிர் மழை காத்த கோபாலா ,
                   ஹே, மாமாயா,
                    ஹே மகர நெடுங்குழைக்காதனே ,
                    ஹே நிகரில் முகில் வண்ணா ,
                    ஹே ஆதி நாதா, ஆதிப் பிரானே,
                    ஹே பொலிந்து நின்ற பிரானே,
                    ஹே வடபத்ர சாயீ,
                    ஹே நின்ற நாராயணா ,திருத்தண்காலப்பா ,
                    ஹே கூடலழகரே
                    ஹே பள்ளிகொண்ட பெருமானே,
                    ஹே சூர்ய நாராயணனே ,
                    ஹே பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய பெருமானே,
                    ஹே காளமேகப் பெருமானே,
                     ஹே திருமோகூர் ஆப்தனே,
                     ஹே நின்ற நம்பியே,
                     ஹே குறுங்குடி நம்பியே,
                     ஹே வடுக நம்பியே,
                     ஹே வைஷ்ணவ நம்பியே,
                     ஹே திருப்பாற்கடல்  நம்பியே,
                     ஹே மலைமேல் நம்பியே,
                     ஹே அழகிய நம்பியே,
                     ஹே தோதாத்ரி நாதனே ,
                     ஹே தெய்வ நாயகனே,
                     ஹே வைகுண்ட நாதனே,
                      ஹே கள்ளப்பிரானே,
                      ஹே விஜயாசனப் பெருமானே,
                      ஹே காய்சின வேந்தே,
                      ஹே ஸ்ரீனிவாசனே, தேவப் பிரானே,
                     ஹே வைத்தமாநிதியே ,
                      ஹே அழகரே,   கள்ளழகரே ,மாலாங்காரரே, 
                      ஹே மாலிருஞ்சோலை  நம்பியே,
                      ஹே உரக மெல்லணையானே,
                       ஹே சௌம்ய நாராயணனே,
                      ஹே கல்யாண ஜெகன்னாதா ,
                      ஹே மெய்யப்பனே,
                      ஹே சத்யகிரி நாதனே, 
                      ஹே சத்யமூர்த்தியே ,
                  அடியேன் பொய்கை ஆழ்வாரைப் புரிந்தேன் அல்லேன்; பூததாழ்வாரைப் பற்றியவனல்லேன் ; பேயாழ்வாரைத்தெரிந்தே னல்லேன் ; 
                                   திருமழிசை ஆழ்வாரைப் படித்தேனல்லேன்; நம்மாழ்வாரை நாடினேனல்லேன்; மதுரகவியை மறந்தே போனேன்;
                                  குலசேகரரை அறிந்தேனல்லேன்; பெரியாழ்வாரைப்  போற்றினே னல்லேன் ;ஆண்டாள் நாச்சியாரை அறவே மறந்தேன்;
                                   தொண்டரடிப்பொடி ஆழ்வாரைத்  துதித்தே னல்லேன்; திருப்பாணாழ்வாரைப்பார்த்தே னல்லேன்; திருமங்கை மன்னனை
                                    எண்ணவே  மறந்தேன்;
                   உன்னை , என்  சொல்லி ஸ்தோத் தரிப்பேன் ?
----------------------------------------------------------
                       ஹே நாவாய் முகுந்தனே ,நாராயணனே,
                       ஹே உய்யவந்த பெருமானே , அபயப்ரதா,
                       ஹே காட்கரையப்பனே,
                       ஹே திருமூழிக் களத்தானே, அப்பனே,
                       ஹே ஸ்ரீ சூக்திநாதப் பெருமானே,
                       ஹே கோலப் பிரானே, திருவாழ் மார்பனே, ஸ்ரீ வல்லபனே,
                       ஹே அத்புத நாராயணனே,
                       ஹே இமயவரப்பனே,
                       ஹே மாயப்பிரானே,
                       ஹே திருக்குரளப்பனே,
                       ஹே பாம்பணையப்பனே, கமலநாதனே,
                       ஹே அனந்த பத்மநாபனே,
                        ஹே ஆதி கேசவப் பெருமானே,
                       ஹே திருவாழ் மார்பனே,
     ஸ்ரீ மந்நாத முனிகளை நாடினேனில்லை;   ஸ்ரீ உய்யக்கொண்டாரைத் தெரிந்தே னில்லை ; மணக்கால் நம்பியை மறந்தே போனேன்; ஸ்ரீ ஆளவந்தார்  அருகில்    போகவே     அஞ்சினேன்;பெரிய நம்பியை நம்பினேனில்லை; ஸ்ரீ மத் பகவத் ராமானுஜரை பார்க்கவே பயந்தேன்; கூரத்தாழ்வான்
                                ஏறத்தாழத் தெரியாது; திருக்குருகைப் பிரான் பிள்ளானை நினைவே இல்லை; திருவரங்கத் தமுதனார் அளித்த அமுது தெரியாது;
                                முதலியாண்டான் , முதலிலேயே தெரியாது; கிடாம்பி ஆச்சான் ,ஆரென்று கேட்பேன்; எங்கள் ஆழ்வான் ,எங்கே என்பேன்;
                                நடாதூர் அம்மாள் , பெண்ணோ என்பேன்; அப்புள்ளாரை எப்போதும் அறியேன்
           உன்னை என்  சொல்லித் ஸ்தோத் தரிப்பேன் ?
            ----------------------------------------------------------
                        ஹே ஆதிகேசவப் பெருமானே,
                       ஹே அஷ்ட புஜப் பெருமானே,
                        ஹே கஜேந்திர வரதா,
                       ஹே தீபப் ப்ரகாசரே  ,
                       ஹே ந்ருசிம்ஹா, முகுந்தநாயகா,
                        ஹே பாண்டவதூதரே,
                        ஹே நிலாத் திங்கள் துண்டத்தானே,
                        ஹே உலகளந்த பெருமானே,
                        ஹே யதோக்தகாரியே,
                        ஹே கருணாகரா
                        ஹே கார்வானனே
                        ஹே கள்வரே,
                         ஹே பவளவண்ணனே,
                         ஹே பரமபதநாதனே, 
                         ஹே விஜயராகவா ,
                         ஹே பக்தவத்சலா, 
                          ஹே வீரராகவா ,
                          ஹே வேங்கடக்ருஷ்ணா, பார்த்தசாரதி ,
                          ஹே நீர்வண்ணா, நீலமுகில்வண்ணா,
                          ஹே லக்ஷ்மீ வராஹா,  
                          ஹே ஸ்தலசயனப்பெருமானே, உலகுய்ய நின்றவனே,
                          ஹே யோக ந்ருசிம்ஹா ,
         ஸ்வாமி  தேசிகனை , தேசமெல்லாம் போற்றினாலும், நீசன் அறிந்திலேன்; குமார வரதாசார்யரை என்கிற நயினாசார் யரை   ,நானொன்றும்
                          புரிந்திலேன்;  
         உன்னை என்  சொல்லி  ஸ்தோத்தரிப்பேன் ?
----------------------------------------------------------
                          ஹே  மூவராகிய ஒருவனே, தேவநாதனே,
                          ஹே தேஹளீசா, த்ரிவிக்ரமா,
                           ஹே கோவிந்தராஜனே,
                           ஹே தாமரையாள்கேள்வனே, பார்த்தசாரதியே,
                           ஹே அண்ணன் கோயில் பெருமானே, கண்ணா, நாராயணா,
                           ஹே மணிக்கூட நாயகனே,
                           ஹே ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கரே, செங்கண் மாலே,
                           ஹே தெய்வ நாயகா, மாதவா,
                            ஹே லக்ஷ்மி ந்ருசிம்ஹா, வயலாலி மணவாளா,
                             ஹே வைகுண்ட நாதா,
                             ஹே நாராயணா, நந்தாவிளக்கே,
                             ஹே பேரரு ளாளா ,
                             ஹே புருஷோத்தமா,
                             ஹே குடமாடு கூத்தனே,
                             ஹே தாடாளா,
                             ஹே கோபாலக்ருஷ்ணா ,
                              ஹே  பரிமளரங்கநாதா,
                              ஹே நாண்மதியப்பெருமானே,
                              ஹே அருட்மா கடலே, சலசயனப்பெருமானே,
                              ஹே ஆமருவியப்பா ,
                               ஹே கோலவில்லி ராமா, ஸ்ருங்கார சுந்தரா,
                               ஹே நந்திபுர விண்ணகரா, ஜெகன்னாதா,
                               ஹே நீலமேகா, மணிக்குன்றா , நரசிம்ஹா,
                               ஹே சௌந்தர்ய ராஜா, நீலமேகா,
                               ஹே லோகநாதா, தாமோதர நாராயணா,
                               ஹே செளரி ராஜா,
                               ஹே பக்தவத்சலா, பத்தராவியே,
                               ஹே சாரநாதா,
                               ஹே திருநறையூர் நம்பியே, வாசுதேவா, ஸ்ரீ னிவாசா,
                               ஹே ஒப்பிலியப்பா, ஸ்ரீ னிவாசா,
                               ஹே ஆராவமுதா, சாரங்கபாணி, அபர்யாப் தாம்ருதா ,
                               ஹே ஆண்டளக்கும் அய்யனே,
                               ஹே வல்வில் ராமா,
                               ஹே கஜேந்திர வரதா ,
                               ஹே ஜகத் ரக்ஷகா
                                 ஹே ஹரசாப விமோசனப் பெருமானே,
                                 ஹே அப்பக் குடத்தானே,  அப்பாலா ரங்கநாதா,
                                 ஹே சுந்தரராஜனே, வடிவழகிய நம்பியே,
                                 ஹே புண்டரீகாக்ஷா,
                                 ஹே புருஷோத்தமா,
                                 ஹே அழகிய மணவாளா,
            ஸ்ரீ பாஷ்யம்  என்னவென்றே  தெரியாது; ஸ்ரீ மத் ரஹஸ்யத் ரய ஸாரம் , ஸ்வாமி தேசிகன்  அருளியது  என்று  பெரியோர்கள் சொல்வர், அடியேனுக்கு
                                  ஒன்றும் தெரியாது; கீதா பாஷ்யம் , இது கீதத்தின் தொகுப்பா என்று கேட்கும் க்ஜான  சூன்யம், அடியேன்;பகவத் விஷயம்  ---இது நமக்கு
                                   சம்பந்தமில்லை என்று ஒதுங்கி விட்டேன்;    
              உன்னை என்  சொல்லி ஸ்தோத் தரிப்பேன் ?
                                 ----------------------------------------------
                                  ஹே திருவேங்கட முடையானே, ஸ்ரீ நிவாசா, ஏழுமலையானே,
                                 ஹே ப்ரஹ்லாதவரதா, மாலோல நரசிம்ஹா,அஹோபில நரசிம்ஹா,
                                   ஹே  வராஹ நரசிம்ஹா, யோகானந்த நரசிம்ஹா, பாவந நரசிம்ஹா,
                                 ஹே காரஞ்ச நரசிம்ஹா, சக்ரவட நரசிம்ஹா, பார்கவ நரசிம்ஹா,
                                 ஹே ஜ்வாலா நரசிம்ஹா,
                                  ஹே த்வாரகா தீசா ,கல்யாண நாராயணா,
                                 ஹே மன மோஹன கிருஷ்ணா,
                                 ஹே பால கிருஷ்ணா, கோவர்த்த நேசா,
                                 ஹே நீலமேகா, புருஷோத்தமா,
                                 ஹே ஸ்ரீ ராமா, சக்ரவர்த்தித் திருமகனே,
                                ஹே தேவராஜா, ஸ்ரீ ஹரி,
                                 ஹே பரமபுருஷா வாசுதேவா,
                                  ஹே பத்ரி நாராயணா
                                  ஹே முக்தி நாராயணா,
                                  ஹே   வரதராஜா, பேரருளாளா , தேவப் பெருமாளே,    
                                  ஹே ரங்கநாதா, பெரிய பெருமாளே, அழகிய மணவாளனே, நம்பெருமாளே,
                நான்கு வேதங்களும் தெரியாது, அவற்றில் கிஞ்சித்தும் தெரியாது;  உபநிஷத்துக்கள் தெரியாது; இதிகாசங்கள் தெரியாது; புராணங்கள் தெரியாது;
                                  ஸ்தோத்ர ரத்னம் தெரியாது; ஆசார்யர்கள் அருளிய ரஹஸ்ய க்ரந்தங்கள் தெரியாது; வேதாந்த க்ரந்தங்கள் தெரியாது; அனுஷ்டான க்ரந்தங்கள்
                                   தெரியாது; நாலாயிர திவ்யப் பிரபந்தம் தெரியாது' ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் தெரியாது; ஸ்தோத்ர ரத்னம் தெரியாது; எந்த ஸ்தோத்ரமும் தெரியாது;
                   உன்னை என் சொல்லி ஸ்தோத் தரிப்பேன் ?                    
                       ----------------------------------------------------------
                                  ஹே க்ஷீராப்தி நாதனே  
                                  ஹே வைகுண்ட நாதனே, பரமபத நாதனே 
                
                 அடியேன் ப்ரஹ்லாதனல்லன் ;  அடியேன் துருவனல்லன் ; அடியேன் நித்ய சூரி அல்லன்; அடியேன் நாரதன் அல்லன்; அடியேன் வ்யாசாதிகள்  அல்லன்;
                  அடியேன் சப்த ரிஷிகள் அல்லன்; அடியேன் அம்பரீஷன் அல்லன்; அடியேனுக்கு, உன்னிடம் ஆய்ச்சியர்களுக்கு உள்ள பக்தியில் ,அணுவளவும் இல்லை;
                  அப்படியானால், அடியேன் யார் என்று கேட்கிறாயா ?
                  ஆயிரமாயிரம்  ஹிரண்ய கசிப்பு, ஹிரண்யாக்ஷன், ராவணன், கும்ப கர்ணன், சிசுபாலன் ,  தந்த்ரவக்ரன்     ஆகியோரின் மொத்த உருவம், அடியேன்.
                  ஆனாலும்,
                   இப்போது,எப்படி மாறினேன் என்கிறாயா ? சொல்கிறேன்.
                   நீ கொடுத்த தேகத்தில் பளபளப்பு இல்லை; இளரத்தம் இல்லை; நம்பிய யாவரும், இந்தப் பயணத்தில் நட்டாற்றில் கைவிட்டார்கள்; பத்னி/புத்ரர்கள்
                   உறவு ,உற்றார்கள் நெருக்கம் யாவும் தன்னலத்தின் மீது  பிறந்து, வளர்ந்து,  இந்த சம்சாரம் என்கிற சாகரத்தில் "பார்த்தநீயம் "செடியைப் போல
                   அடியேனைச் சுற்றி வளைத்துக் கொண்டு இருக்கிறது; இந்த ஜீவன் படும் துன்பம் "தாளம் படுமோ,  தறி படுமோ , "என்று இருக்கிறது;
                   "தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் " என்கிற நான்கு புருஷார்த் தங்களுக்கு  எதிராக, "பசி, பிணி, மூப்பு, துன்பம் " என்கிற விரோத அர்த்தங்களால்
                    சூழப்பட்டு இருக்கிறேன்;
                   நீசனேன்; நிறை ஒன்றும் இல்லேன்; ஈனச் சொல் தவிர மற்றொன்றும் அறியேன்; சூதினைப்  பெருக்கினேன்;
                    அப்போதுதான்,
                    ஸ்ரீ ஹயக்ரீவனாக நீ பிரசன்னமானாய்; பெரிய பிராட்டி, அகத்தில் அமர்ந்தாள்;
                    இப்போது, பழுதே பல காலம் போயின என்று அழுதேன்; அலற்றினேன்; கண்ணீர் விட்டேன்; கதறினேன்;
                    எப்படி என்கிறாயா ? இப்படித்தான்.
                    அடியேன் கர்ம யோகம் செய்ய வல்லவன் அல்லேன்; க்ஜான யோகம் செய்ய வல்லவன் அல்லேன்; பக்தி யோகம் செய்ய வல்லவன் அல்லேன்;
                    ஒரு உபாயமும் அற்றவன்; வேறு எந்தப் பலனிலும் ஆசை இல்லை;  உன்னிடம் அடியேனுக்குக் கள்ள பக்தி கிடையாது;  உள்ளம் , முழுதும்
                      திவ்ய  தம்பதிகளான நீவிர்  அன்றி, வேறு ஒன்றும் அறியாது ; உங்கள் சரணார விந்தங்கள்  தவிர வேறு ஒன்றும் தெரியாது;
                    திருமகளை முன்னிட்டு ,உன் திருவடியே சரணம் என்று அடைந்தேன் ; 
  இதைத் தவிர, உன்னை என் சொல்லி ஸ்தோத் தரிப்பேன் ! 
   
                            மற்றவை  நேரில்  
--
Sarvam Sri  Hayagreeva   Preeyatham
Dasan
Uruppattur Soundararajan

Comments

Popular Posts