நமஸ்காரமும் சித்திரகுப்தனும்

namaskaram


Posted by: "veeraraghavan krishnamachari" murari06@gmail.com gurubudh

Tue Jun 7, 2011 9:33 pm (PDT)

[Attachment(s) from veeraraghavan krishnamachari included below]



--



*ஸ்ரீமதே ரங்கரமனுஜ மஹா தேசிகாய நம



நமஸ்காரமும் சித்திரகுப்தனும்



அடியேன் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் ஸ்ரீமான் நடதூர் கருணாகர ஸ்வாமிகள்

மகாபாரதம் உபன்யாசம் சாதித்து கொண்டு இருக்கிறார்.

நேற்று பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தால் எத்தனை பெருமை செய்யாவிட்டால்

எத்தனை பாவம் என்று சொல்லும்போது தனது இளம் வயதில் நடந்த உண்மை

சம்பவத்தினை சொல்லி விட்டு இளைய தலை முறை நித்யம் பெற்றோர்,பெரியவர்களை

நமஸ்காரம் செய்தாலே எல்லாம் ஜெயம் என்றார்.

அவர் சொன்னபடி எழுத ப்ரதிகிறேன்.

சுவாமிகள் சொன்னது ' நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது முக்கூர்

சுவாமிகளை தெண்டம் சமர்பிக்க போனேன் ,அவர் ஏகாந்தமாக திண்ணயில் அமர்ந்து

கணக்கு போட்டு கொண்டு இருந்தார் , அப்போ பகல் இரண்டு மணி நல்ல வெய்யில் ,

என்னிடம் இந்த சேலேடு பலகையை பிடி நான் சொல்லும் கணக்கு போடு என்றார்

' ஆஹா அடியேன் ' என்றேன்

அப்போ தெருவில் ஒருவன் பாய் விற்று கொண்டு போனான் ,பாய் வேண்டுமா என்று

இருவரிடமும்

இரண்டு முறை கேட்டான் ,இவர் வேண்டாம் என்றார் மேலும் கிழே போய் விட்டு

மீண்டும் கேட்டான்

மறுமுறை வந்தான்,இத்தனை பெரிய சன்யாசியை பார்த்து விட்டு நமஸ்காரம் செய்ய கூட

மறந்து விட்டு

தனது வியாபாரத்திலேயே குறியாக இருந்தான்

முக்கூர் அவனை அழைத்து எல்லா பாயும் ஒரு விலை போட்டு கொடு என்றார் ,

அவனும் மிக்க சந்தோஷத்தில் அவரை விழுந்து விழுந்து கும்பிட்டான்

என்னை பார்த்து டேய் உள்ளே போய் ஸ்ரீ காரியதிடம் பணம் வாங்கிண்டு வா என,

நானும் ஓடி போனேன்

ஸ்ரீ காரிய மாமா என்னை பார்த்து நேற்று தானே ஒரு கட்டு பாய் வாங்கினர்

மறுபடியும் '''''' என்று கேக்க நான் பணம் கொண்டு வந்து கொடுத்தது விட்டேன்

முக்கூர் என்னிடம் '''''ஏண்டா உள்ளே மாமா எதாவது கேட்டாரா என்றர் '''''''

'''ஆமாம் நேற்று தான் பாய் வாங்கி விட்டு மறுபடியும் '''''இன்று என

அமைதியாக சொல்ல

''ஏண்டா நான் இன்று ஏன் வாங்கினேன் கேளேண்டா ''''

''''அடியேன் அப்படியே ''''''

இதோ பாரு ''''''பாய் விக்கறவன் மூன்று முறை வந்து போனான் ஒருமுறை கூட

சன்யாசியை நமஸ்காரம் ''''''' பண்ணலை ''''''இது மஹா பாவம் ''''''இதை சித்ரா

குப்தன் கணக்கில் எழுதி விடுவான்

'''''''இதுக்கு நான் காரணமாக இருக்கபடாது, அதஹான் பாயும் வாங்கினேன்

அவனையும் பாவத்தில் இருந்து தள்ளி விட்டேன் ''''''என்றார்

அடேயப்பா என்ன உயந்த சிந்தனை , குரு என்றாலே நமக்கு நல்ல வழி காட்டுபவர்

மட்டுமல் இல்லை

பாவத்தில் இருந்து கரை கடக்க கை கொடுப்பவர் என்று தெளிவாக புரிகிறது

இளைய தலை முறையில் பலர் பழக்கத்தில் வைத்து இருக்க சிலர் நமஸ்காரம்

செய்வது இல்லை இனியாவது புரிந்தால் சரி

''''போட்டோ மல்லேஸ்வரம் வேணுகோபலச்வாமி வெண்ணைதாழி கோலத்தில் நேற்று

'''''''''

திருமதி. மீரா வீரராகவன்

வடுவூர் வீரராகவன்

9379167856

Comments

Popular Posts